கண்ணீரைக் காண்கின்ற தேவன்

கண்ணீரைக் காண்கின்ற தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   கண்ணீரை காண்கின்ற தேவன்

                        கரம் நீட்டி துடைத்திடுவார் - உன்

                        கலங்காதே கலங்காதே

                        கண்மணிப் போல் உன்னை காத்திடுவார்

 

1.         ஆகாரின் கண்ணீரை கண்டதினால்

            அன்றே கொடுத்தார் ஒர் ஊற்றை

            நீ கோரும் காரியம் கண்ணீரானால்

            நிறைவேற்றுவார் நிச்சயமாய்

 

 

2.         நீ சிந்தும் கண்ணீருக்கு விலையுமுண்டு

            நிறுத்து பார்த்து கணிப்பதுண்டு

            கசிந்து உருகி எண்ணப்படும்

            காலத்தே அவைகள் நிறைவேறும்

 

3.         சுமக்கும் கழுதையின் பாங்கினைப் பார்

            சோகத்தை யாரிடம் கூறிடும் கேள்

            உமக்கு மேலே ஒருவனுண்டு

            உன் பாரம் சுமக்க அவருமுண்டு

 

4.         கண்ணீரோடு விதைத்தால்

            கனம் பெறுவாய்

            கெம்பீரத்தோடு அரிகளை

            அள்ளி கட்டுவாய்

            தண்ணீரும் நெருப்பும் தடை செய்யாதே

            தாராளமாய் முன் செல்லுவாய்

 

5.         வெட்டாத கிணற்றிலே நீர் அருந்தி

            நட்டாத மரத்திலே கனி புசிப்பாய்

            கட்டாத பட்டணத்தில் குடியிருந்து

            கர்த்தரின் ஆசிகளை அனுபவிப்பாய்

 

https://www.youtube.com/watch?v=yRuLbgZJvKA

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு