துதி ஓயாமல் செலுத்திடுவேன் பரி

துதி ஓயாமல் செலுத்திடுவேன் பரி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

378. 

 

                             பல்லவி

 

                   துதி ஓயாமல் செலுத்திடுவேன் - பரி

                   சுத்தரராம் இயேசு எனக்கே - புவி

                        எங்கும் அவர் நாமம் முழங்க.

 

                             சரணங்கள்

 

1.         பாவர் வலையில் மாளும் பாவியே வா இவ்

            வேளையிலே துதிக்க உன்பரனை

            பார் அதோ! பார் உன் நேசர் தொங்குகிறார்

            பாதகரின் தீர்ப்பைத் தன்னில் தாங்கியே தான்மாள்கிறார். - துதி

 

2.         நோயால் வாடியே மாயும் ரோகியே

            தேவசுதன் உன்நோய் சுமந்தனரே

            பார் அதோ!பார் கல்வாரியிலே சாபம் நீக்க

            பாவ மாகி ஈந்தாரே தம் சீவனையே உனக்காய் - துதி

 

3.         ஆதி முதலாக வீழ்ந்த பேதையே வா

            அண்டியே துதிக்க உன் நேசரை

            தாழ்த்தினாரே உன் தேவன் உனக்காய்

            பாதாளம் வரையும் சென்றே செயித்தார் உன்னாசையால் - ஆதி

 

4.         ஆதரவின்றி வாடும் தோழனே, பாராய்!

            உன் நேசர் நிற்கிறார் உன் அண்டையே

            கைவிட்டாலும் தன் கர்த்தன் கையிலே

            கருத்துடன் தனதாவி ஈந்ததால் செயித்தாரே - ஆதி

 

5.         வானம் புவியும் வாழும் சிருட்டியும்

            வாழ்த்திடாயுன் மீட்படுத்திடுதே

            வென்றார்க்கும் தொனியே அல்லேலூயா

            அம்பரம் நின்றுகேட்கு மந்நாளிலே சேர்ப்பாரே - ஆதி

 

 

https://www.youtube.com/watch?v=i3Bzpxb4GpY

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு