திருவிருந் தருந்திட வாரும்

திருவிருந் தருந்திட வாரும் ஏசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

295. இராகம்: யமுனாகல்யாணி                   ஆதி தாளம் (463)

 

                             பல்லவி

 

          திருவிருந் தருந்திட வாரும்;-ஏசு

            திருச் சடலமது சேரும்

 

                             அனுபல்லவி

 

            இருசுகம்[1] தருவார், வாரும்;-மிக

            இலவசமாயீவார்-இது சோதனை பாரும் - திரு

 

                             சரணங்கள்

 

1.         இருதயம் நொறுங்குண்ட பேர்க்கும்-ஐயோ!

            என் போலுண்டோ பாவி? யென்போர்க்கும்

            மருகித் திகைத்து மாய்வோர்க்கும்-மா

            தேவன் நின்றழைப்பதைச் சன்மானிப்போர்க்கும் - திரு

 

2.         வாதையாம் பாவக்கந்தை எடுத்து-ஏசு

            மகிப னுதிரத்திற் றோய்த் துடுத்து

            நீதியினாடைகள் தரித்து-நமின்

            நேசனின் திருச் சன்னிதானத்தை யடுத்து - திரு

 

3.         இருதய தூபகலத்தில்-திட

            விசுவாசமெனும் வர்க்கமிட்டு,

            த்யானமெனும் நெருப்பு மூட்டி-தேவ

            ஆசனத்தைய சைக்கத் தகுதியாய் நீட்டி - திரு

 

4.         விலைகொள்ளாத திருரத்த ரசமாம்-விருந்ததில்

            மேலவன் மாம்ச போஜனமாம்;

            நிலையதாய்ப் பசி யிலையென்பதாம்-வான

            நேச மகாராஜனின் நித்தியமான அன்பதாம் - திரு

 

- டி. சுந்தரம்

 

https://www.youtube.com/watch?v=BptAAiWd4Uw

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] மிகுந்த

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு