திவ்விய வாசகன் பாருங்கள்

திவ்விய வாசகன் பாருங்கள் யோவான் மூப்பன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

101. இராகம்: துசாவந்தி.                                                                                                     தாளம்: ஆதி.

 

                                                                        பரிசுத்த யோவான் சுவி திருநாள் - திசம்பர் 27ஆம் நாள்

 

                             புத்தியாய் நடந்து வாருங்கள்” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

                   திவ்விய வாசகன் பாருங்கள் - யோவான் மூப்பன்

                   திருநாள் தொழுதிட வாருங்கள்.

 

                             அனுபல்லவி

 

            ஒவ்விய மனமும் வாக்கும் ஒழுக்க வணக்க மாக்கும்

            செவ்விய செப தேயுவின் செல்லப்பிள்ளை தானாக்கும் - திவ்விய

 

                             சரணங்கள்

 

1.         ஏகோவா கிருபை யுள்ளவர் - ஆக இருந்தார்

            இந்தப் பேர ருத்த முள்ளவன்

            வாகான பெத் சா யிதா வின் - வலையுடன்

            வள்ளமுந் தள்ளியே வந்தவன்

            தாகமுடன் இயேசு குரு நாதனுக்குப் பணிவிடை

            வேக முடன் செய்த தாயும் சாலோமி என்னப்படுவாள் - திவ்விய

 

2.         இயேசு நச ரேயன் கூப்பிடத் - தடை யின்றி

            எழுந்த வரைப் பின் சென்றிட

            நேசமுடன் அன்பு கூர்ந்திட - நெடுகிலும்

            நிஷ் களங்க சிநேக மூடிட

            பாசமில்லாச் சமாரியர் பக்தி செய்யா திருந்ததால்

            ஆசையோடே வான் நெருப்பால் அழிக்க வரங் கேட்டவன் - திவ்விய

 

3.         இடிமுழக்க மைந்த னென்றுமே - இதினாலே

            இட்ட பேரும் நின்ற தென்றுமே

            படியிலொரு புதிய சீடன் - அற்புதங்கள்

            பாங்குடனே செய்தவுடன்

            நொடியி லேசு நாமம் சொல்ல நோகப் பேசித் தடுத்திட்டான்

            முடிவிலே நம் இரட்சகரும் மூப்பனுக்குப் புத்தி சொன்னார் - திவ்விய

 

4.         சத்திய யோவானும் பேதுரும் - சற் குரு வுடன்

            சகல நாளுமே சதுரும்

            முக்கிய சமய மனைத்தும் - ஒன்றாகவே

            முதன் மையுடனே நினைத்தோம்

            புத்தியாய் ஆயத்தம் பஸ்கா, போதக அன்னாவின் மனை,

            எத்தியே கல்லறை பார்க்க, இருவரும் ஓடினார்கள் - திவ்விய

 

5.         ஆண்டவன் சிலுவை யடியில் - யோவான் நிற்க

            அன்னை மரி தாயு மாகினள்

            மாண் டெழுந்த தேவ சுதனார் - மறுபடியும்

            வந்து வந்து காட்சி யளித்தார்

            நீண்ட காலம் தானிருந்து நேர்த்தியாய்ச் சபைகள் நாட்டிப்

            பூண்டிடும் கிறிஸ்து அன்பில் பூரிப்பாய்ப் பனுவல் செய்தான் - திவ்விய

 

6.         நாலாம் சுவி சேஷ முழுதும் - சோதியின் கதிர்

            ஞானப் பிர காச வெளிச்சம்

            மேலான நிருப மனைத்தும் - சவ வார்த்தை

            வேதாந்த சித்தாந்த போதகம்

            பூலோகம் வானமும் போக, புதிய சிருட்டி யாக

            காலம் வரு முன்னே தீர்க்கன் காட்டினன் வெளிப்படுத்தல் - திவ்விய

 

7.         தேவனால் பிறந்த வரைத் தான் - எவன் அறிவான்?

            தேவனால் பிறந்தோன் அறிவான்

            பாவ பாசமுள்ள மனுடன் - யோவான் முனியைப்

            பத்மு தீவில் சிறை யாக்கினான்

            ஆசியாவி லுற்ற சபை ஏழையும் நிலைப்படுத்தி

            அந்த எருசலேம் நகர் அழிவையும் பார்த்துக் கொண்டான் - திவ்விய

 

8.         பூரண வயது நூறில் - சாயுச்சியமாம்

            புண்ணிய நித்திரை யூரில்

            ஆரணக் கிழவன் மரிக்க - அனந்தம் சபை

            அன்புடன் அதை விசாரிக்க

            மாரண வேதம் போதிக்க மக்களும் மனங் கொதிக்க

            மந்திரம் நிறைந்த மனப் பக்தியுடன் முத்தி சேர்ந்தான் - திவ்விய

 

- S. உவால்டர் கவிராயர், தென்மலை.

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு