துதித்திடுவேன் தூயவர் இயேசுவையே

துதித்திடுவேன் தூயவர் இயேசுவையே

                   துதித்திடுவேன் தூயவர் இயேசுவையே

                        தூய ஆவியால் நிறைந்து மகிழ்ந்து

                        துதித்துப் போற்றிடுவேன்

 

1.         அக்கினி சோதனை

            அலை மோதும் போதும்

            உம்மாலே சேனைக்குள்

            பாய்ந்திடுவேன்

            உம்மாலே மதிலைத் தாண்டிச்

            சென்றிட பெலனும்

            ஈந்தீரே உம்மைப் போற்றாமல்

            துதியாமல் இருப்பேனோ

 

2.         முன்னும் பின்னும் உம் வழியை

            அறியாமல் திகைக்கும் வேளையிலே

            செம்மையான பாதையில்

            நடக்க வழியும் காட்டினீரே - உம்மை

 

3.         பெருவெள்ளம் சீறி மோதுகையில்

            பெருங் கன்மலையின் நிழலுமானீர்

            உறுதியாய் உம்மில் நிலைத்து நிற்க

            உறைவிடம் அளித்தீரே - உம்மை

 

4.         யோர்தான் போன்ற சோதனைகள்

            பிரவாகித்து வரும் வேளையிலே

            மனம் பதறாமல் நிலைத்து

            நின்று கனி தரச் செய்தீரே - உம்மை

 

5.         கட்டுகள் காவல் சூழ்ந்திடும் வேளை

            கர்த்தர் எனக்காக யாவையுமே

            செய்து முடிப்பார் என்ற வல்ல

            நம்பிக்கை அளித்தீரே - உம்மை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு