தாவீதின் வழியினில் மாதாவின் மடியினில்

தாவீதின் வழியினில் மாதாவின் மடியினில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தாவீதின் வழியினில் மாதாவின் மடியினில்

                        பூவியாள வந்த நிலவே

                        இதழோரச் சிரிப்புடன் இமை மூடும் விழியுடன்

                        மலைமீது மறைகின்றதே

                        உடல் காற்றோடு போராடுதே

                        உயிர் வானோடு உறவாடுதே

                        இது தேவன் பாச மழையே

                        இதில் போகும் பாவக் கரையே

 

1.         மரியாளின் சேயான தேவா, தேவா

            மலைமீது தீதான சாவா

            இருவிழி அழுதிடவே உருகுது மனம்

            இருபது விரல் தொடவே பிறக்குது சுகம்

            உனது எழில் நிழல் தொடவே விரையுது கரம்

            உம் வழி நடந்திடவே கொடுத்திடு வரம்

            தேவா வருவாய், வரமே தருவாய் - தாவீதின்

 

2.         கடல் மீது நடந்தாயே தேவா தேவா
            கல்வாரி பலியானாய் ஏனோ ஏனோ

            முள்முடி அழுத்திடவே கனத்திடும் தலை

            கசையடி விழுந்திடவே கிழிந்திடும் தசை

            குருதியும் வழிந்திடவே நனைந்திடும் உடை

            சிலுவையும் சுமந்திடவே துடித்திடும் உடல்

            நீ ஏன் மரித்தாய், தேவா உரைத்தார் - தாவீதின்

           

- சூர்யதாஸ்

 

https://www.youtube.com/watch?v=E_z6LPVh1sg

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு