நாசியிலே சுவாசம் உள்ள மனிதனை நம்பாதே

நாசியிலே சுவாசம் உள்ள மனிதனை நம்பாதே

          நாசியிலே சுவாசம் உள்ள மனிதனை நம்பாதே - (2)

            காலம் மாறும் முன்னே மனுசனும் மாறுவான் அண்ணே (2)

                        நம்பாதே நம்பாதே நம்பாதே நம்பாதே

 

1.         அவன் இருதயமோ மகா கேடு நிறைந்தது

            அவன் நாவின் கீழே பாம்பின் விசம் உள்ளது - 2

            இனிமையாய் பேசுவான் இதயத்தில் யோசிப்பான்

            இன்னல்களை காலம் முழுவதும் தந்திடுவான் - 2 - நாசியிலே

 

2.         அன்னை என்ன தம்பி என்ன சொந்தம் என்ன

            அரை அடி நிலத்தில்கூட வம்பு என்ன - 2

            பட்டயத்தை தீட்டுறான் பலிவாங்க நினைக்கிறான்

            பகைமை காலம் முழுவதும் வளர்த்துக் கொள்வான் - 2 - நாசியிலே

 

3.         ஆண்டவராய் இயேசுவை நம்பிடுவாய்

            கண்ணீரையும் கவலையையும் நீக்கிவார் - 2

            பொய் சொல்ல மனிதனல்ல மனமாற மனுசன் அல்ல

            பொன்னான வாழ்வினை தந்திடுவார் - 2 - நாசியிலே

 

- Evg. S. Padmanabhan

 

https://www.youtube.com/watch?v=QHt9u554_EI

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு