இறைவா
நீ ஒரு சங்கீதம்
- அதில்
இணைந்தே
பாடிடும் என் கீதம்
உன் கரம்
தவழும் திருயாழிசை
- அதில்
என் மனம்
மீட்டிடும்
தமிழ் ஏழிசை
1. புல்லாங்குழலென
தனித்திருந்தேன்
- அதில்
இசையாய்
என் மனம் புகுந்திடுவாய்
- 2
பாவியென்
நெஞ்சமும்
துயில் கலையும்
- புதுப்
பாடலால்
என்னகம் இணைந்திடுமே
எரிகின்ற
சுடராக விண்மீன்கள்
உன் வானில்
எனை
இன்று திரியாக
ஏற்றாயோ இறைவா
காற்றாகி
ஊற்றாகி கார்மேக மழையாகி
வாழ்வாகி
வழியாகி
வாராயோ
இறைவா (2) - இறைவா
2. கல்லிலும்
முள்ளிலும்
கால் நடந்தாலும்
- நீ
தோளினில்
சுமந்தே வழிநடந்தாய்
- 2
நாதா உன்
வார்த்தைகள் வானமுதம் -
2 என்னை
நாளெல்லாம்
வாழ்விக்கும்
தேனமுதம்
தோள்
மீது தாலாட்டும்
தாயாகும் தெய்வம்
தாள்
போற்றி நின்றாலே
நூறாகும்
செல்வம்
அருளாளன்
நீயின்றி
அழகேது என்னில்
அதை நானும்
அடையாமல்
விடிவேது
மண்ணில் (2) - இறைவா
https://www.youtube.com/watch?v=ic6vD5xIvw8
No comments:
Post a Comment