விழித்தெழும்பு சபையே
விளைவினை
அறுக்கவே
வயல்களை நோக்கிடுவோம்
அறுவடை செய்குவோம்
1. ஆறுதல் கூறிட யாரும் இல்லை
ஆத்தும ஆதாயம் செய்திடுவோம்
திறப்பில் நின்றிட ஆட்கள் இல்லை
இரவும் பகலும் உழைத்திடுவோம்
2. ஒருவரும் கிரியை செய்யக்கூடா
இருளின் வேளையும் நெருங்கிடுதே
ஒளியின் காலம் முடிந்திடும்
முன்னே
உந்தனின் சேவை செய்திடுவாய்
3. இயேசுவின் ராஜ்ஜியமம்
பெருக வரை
இயேசுவின் சேனையில் உழைத்திடுவோம்
பொறுப்பாய்
ஊழியம் செய்து நாமே
சபையில் நிலைத்து தாங்கிடுவோம்
4. கால்களோ இல்லை
அலைந்து திரிய
வாய்களோ வேண்டும்
பேசிடவே
தரிசனம் நிறைந்த தாசர் தேவை
இயேசுவின் சேவை பாக்கியமே
5. வாழ்க்கையில் நிம்மதி அலைந்து தேடும்
மாந்தரை அணுகி கூறிடுவீர்
காடு மலைகள் கிராமம் தோறும்
எழும்பி சேவை செய்திடுவாய்
No comments:
Post a Comment