அல்லேலூயா
ஸ்தோத்திரம்
துதிகளிலே பாத்திரம்
இயேசு நாதர் புகழையே போற்றிப் பாடிடு
- 2
பாடிடு பாடிடு இயேசு ராஜன்
புகழ் பாடிடு
1. தூதர்கள் போற்றும் தேவன்
துதிகளிலே வாசம் செய்யும் தூய நேசன்
மாந்தர்கள் உள்ளத்தில்
வேந்தனாய் வாழ்ந்திடும்
மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு
2. தாழ்வில் நம்மை நினைத்தவர்
வாழ்விற்கு வழிதனை திறந்து தந்தார்
கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்
காலமெல்லாம் அவர் புகழை போற்றிப் பாடிடு
3. சேதமின்றி காத்தார்
தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்தார்
அன்பின் தேவனை ஆத்தும நேசரை
ஆவியில் நிறைந்து மகிழ்ந்து பாடிடு
No comments:
Post a Comment