அல்லேலூயா அல்லேலூயா
ஆத்துமாவே கர்த்தரைத் துதி
உயிர் உள்ளளவும் அவரைத் துதித்து
உள்ளளவும் பாடிடுவேன்
1. பிரபுக்கள் மனுஷரை நம்பாதேயுங்கள்
அவர்கள் யோசனைகள் அழிந்துபோகும்
யாக்கோபின் தேவன் துணை கொண்டு
கர்த்தரை நம்புவோர் பாக்கியவான்.
- அல்லேலூயா
2. யாவையும் படைத்து உண்மையைக்
காக்கிறார்
ஒடுக்கப்பட்டோர்க்கு நியாயம்
செய்கிறார்
பசித்தோர்க்கு ஆகாரம் தந்து
கட்டுண்டோரைக் கட்டவிழ்க்கிறார்
- அல்லேலூயா
3. குருடர் கண்களைக் கர்த்தர்
திறந்து
விழுந்தோரைத் தூக்கி விடுகிறார்
நீதிமான்களைக் கர்த்தர்
நேசித்து
பரதேசிகளையோ நித்தம் காக்கிறார்.
- அல்லேலூயா
4. திக்கற்ற பிள்ளை விதவைகளைப்
போஷித்து
துன்மார்க்கர் வழியைக் கவிழ்க்கிறார்
சீயோனைக் கர்த்தர் என்றென்றுமாய்
தலைமுறையாய் அரசாளுவார்.
- அல்லேலூயா
No comments:
Post a Comment