1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே!
இயேசுவால் வந்த
பூரண தயவே!
உலகமெல்லாம்
மீட்கும் பாக்கியத் திரள்!
யாவர்க்காயும்
பாயும்; யாவர்க்காயும் பாயும்;
யாவர்க்காயும்
பாயும்; நீ என் மேல் புரள்
2. பாவங்கள் ஏராளம்,
கறை நிறைந்தேன்
மனங்கசந்து
நான் கண்ணீர் சொரிந்தேன்
அழுகை வீணாம்!
ரத்தாம்பரக் கடல்!
அலை சுத்தி
செய்யும்; அலை சுத்தி செய்யும்;
அலை சுத்தி
செய்யும்; வா என் மேல் புரள்
3. ஆசைகள் அகோரம்,
கோபம் கொடூரம்
உள்ளத்தை ஆளுது
தீமையின் உரம்;
உன் அலைகளின்
கீழ், ஓ! பெருங்கடல்!
மீட்புத்தோன்றுதிதோ;
மீட்புத்தோன்றுதிதோ;
மீட்புத்தோன்றுதிதோ;
வா, என்மேல் புரள்
4. சோதனைகள் மோத,
பயங்கள் சூழ
பாழாச்சுதென்
ஜீவன் சுகங்கள் மாள
மெய்யாய் இனிச்
சுகம்! சுத்த நீர்க்கடல்!
என்னை சுத்தி
செய்வாய்; என்னை சுத்தி செய்வாய்;
என்னை சுத்தி
செய்வாய்; வா, என் மேல் புரள்
5. தயா சாகரமே!
வாஞ்சையாய் நின்றேன்
ஜீவிக்கும்
ஆச்சர்ய அலை ஓரம் நான்,
திரும்ப வந்தேன்
கறை போக்குங் கடல்!
உன்னை விட்டுப்
போகேன்; உன்னை விட்டுப் போகேன்;
உன்னை விட்டுப்
போகேன்; வா, என்மேல் புரள்
6. புரண்டுவரும்
அலைகளைத் தொட்டேன்
மீட்க வல்லோன்
என்னும் இரைச்சல் கேட்டேன்
மீட்படைவேன்
என்று நம்பி அலையில்
இதோ மூழ்கிறேன்
நான்; இதோ மூழ்கிறேன் நான்;
இதோ மூழ்கிறேன்
நான்; வா, என்மேல் புரள்
7. அல்லேலூயா! இனி
என் ஜீவகாலம்
அவர் துதியிலே
மகிழ் கொள்ளுவேன்
அளவில்லா மீட்பாம்
அன்பின் ஆழியை
இயேசு திறந்தார்; இயேசு திறந்தார்;
இயேசு திறந்தார்; எல்லாருக்காகவும்!
No comments:
Post a Comment