அல்லேலூயா
ஆராதனை
துதித்துப் பாடி இயேசுவை போற்றி
என்றும் ஆராதிப்பேன் - 2
1. சேனைகளின் கர்த்தர் நீரே
யாக்கோபின் வல்லவரே - 2
அடைக்கலமானவரே அதிசயமானவரே
உமக்கே ஆராதனை - 2
2. நன்மைகளின் ஊற்று நீரே
தீமைகளை வென்றவரே - 2
வல்லமையானவரே மாட்சிமை உள்ளவரே
உமக்கே ஆராதனை - 2
3. வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்கினைக் காப்பவரே - 2
மேன்மையானவரே மகிமையானவரே
உமக்கே ஆராதனை - 2
No comments:
Post a Comment