ஜெயத்தை
தருபவர் இயேசுதான்
துதித்திடுவோம்
துதித்திடுவோம்
ஜெபித்திடுவோம் ஜெபித்திடுவோம்
சுதந்தரிப்போம் சுதந்தரிப்போம்
இயேசு நாமத்தில்
1. வாழ்க்கையிலே வந்திடும்
சின்ன தோல்விகள் பனி போல
உருகிப் போகும் இயேசு நாமத்தில்
தோல்விகளை வெற்றியாக
மாற்றிடும் தேவன்
நமக்குள் என்றும் இருப்பதால்
கலங்கிட வேண்டாம்
2. சூழ்நிலைகள் மாறி மாறி
எதிராய் வந்தாலும்
சுற்றும் முற்றும் பல தடைகள்
எதிர்த்து வந்தாலும்
அபிஷேக வல்லமை எனக்குள் உண்டு
எதுவும் என்னை எதுவும் செய்ய முடியாது
3. பாவத்திலே சிக்கி தவிக்கும்
மனிதர் கூட்டத்தை மீட்பதற்காக
படை போல எழும்பிடுவோம்
எரிகோவும் தாகோனும்
இல்லாமற் போகும்
எனக்குள் இருக்கும் வல்லவர்
எதையும் செய்யும் வல்லவர்
No comments:
Post a Comment