அன்பராம்
இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்
1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
கவலை எனக்கு இல்லையே
புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
என்னை நடத்திச் செல்லுவார் - 2
காலம் மாறினாலும்
பூமி அழிந்தாலும்
இயேசு என்றும் மாறிடார் -
2
எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி
நடத்துவார் - 2 - அன்பராம்
2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
உமக்கே நிகரே இல்லையே
சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச்
செய்து
என்னை நடத்திச் செல்லுவீர் - 2
நல்ல தேவனின்
வல்ல வார்த்தைகளால்
எந்தன் வாழ்வு மலரும் - 2
எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர் -
2 - அன்பராம்
3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
மேகமீதில் ஒரு நாள்
மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
மணவாளன் வந்திடுவார் - 2
ஆயத்தமாகிடுவேன்
அன்பரை சந்தித்திட
பரிசுத்தர்
கூட்டத்தோடு - 2
அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய்
- 2 - அன்பராம்
- Sis Yamuna
No comments:
Post a Comment