அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை
ஸ்தோத்தரி
நெஞ்சமெல்லாம் கொள்ளைகொண்ட
அண்ணலைப் பாடிடு
உயிருள்ள காலமெல்லாம் கர்த்தரைத்
துதித்திடு
உள்ளமெல்லாம் உள்ளவரை கீர்த்தனம்
பண்ணிடு
1. வானத்தை பூமியைப் படைத்தவர்
அவரை நம்பினவன் பாக்கியவான்
உண்மையைக் காப்பார் நியாயஞ் செய்வார்
தலைமுறை தலைமுறை ஆளுவார்
2. குருடரின் கண்களைத் திறப்பவர்
கட்டுண்டவர்களை விடுவிப்பார்
ஆகாரம் தருவார் ஆதரித்துக் காப்பார்
தலைமுறை தலைமுறை ஆளுவார்
3. நீதிமான்களை சிநேகிப்பார்
ஏழைகளை அவர் தாங்குவார்
கைப்பிடித்துக் காப்பார் இராஜரீகம் செய்வார்
தலைமுறை தலைமுறை ஆளுவார்
No comments:
Post a Comment