அற்புதராஜன்
இயேசுவை நம்பு
அற்புதங்கள் செய்திடுவார்
அதிசயமான தேவனைத் தேடு
அதிசங்கள் செய்திடுவார்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஸப்தஸ்வரங்களில் சங்கீதம்
பாடுங்கள் - அற்புதராஜன் இயேசுவை
1. பாவியை விடுதலை செய்திடுவார்
பாவக் கட்டுகளை அவிழ்த்தெறிந்திடுவார்
சாபத்தை நீக்கி ஷேமம் தருவார்
சந்தோஷமாய் நம்மை வாழ வைப்பார் - எல்லோரும்
பாடுங்கள்
2. நாதியற்ற மனுஷராய் இருந்தாலும் - செத்து
நாலு நாளாய் கல்லறைக்குள் கிடந்தாலும்
உயிருடன் எழுப்பிட அவர் வருவார் - இயேசு
யாரென்று அப்போது நீ அறிவாய் - எல்லோரும்
பாடுங்கள்
3. குருடரும் வருவார் அவர் பின்னே
பார்வை அடைந்தே செல்வார் அவர் முன்னே
முடவரும் அமர்வார் அவர் பின்னே
துள்ளி எழுந்தே நடப்பார் அவர் முன்னே
ஆச்சரியமான தேவனவர் - நம்மை
ஆதிசயமாய் அசத்துகின்றவர் - எல்லோரும்
பாடுங்கள்
No comments:
Post a Comment