ஜெபிக்கும்
வாஞ்சை எனக்குத் தாரும் தேவா
விண்ணப்ப ஆவியால் என்னை நிரப்பும்
தேவா - 2
1. கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க
கர்த்தரே இன்று எனக்கு கிருபை தேவா -
2
காலம் நேரம் மறந்து உந்தன்
சமூகத்தில் ஜெபிக்க கிருபை தாருமே - 2 - ஜெபிக்கும்
2. பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்
திறப்பின் வாசலில் நிற்கக் கிருபை தாரும்
- 2
தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
பாரத்தோடு ஜெபிக்க கிருபை தாருமே - 2 - ஜெபிக்கும்
3. உருக்கமாய் உம்மைப் போல் ஜெபித்திடவே
உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே - 2
இதயம் நொறுங்கி பெருமூச்சோடு
ஊக்கமாய் ஜெபிக்க கிருபை தாருமே - 2 - ஜெபிக்கும்
- Rev. J. Jayachandran
No comments:
Post a Comment