அற்புதங்கள் செய்கிறவர் இயேசு
ஆன்மாவை இரட்சிப்பவர் இயேசு
அகிலத்தையே போஷிப்பவர் இயேசு
அனுதினம் அவருடன் பேசு பேசு
1. ஐந்தப்பம் இரண்டு மீனையும் ஆண்டவர்
ஐயாயிரம் பேருக்கு கொடுத்தாருங்கோ
கானாவூரு கல்யாணத்தில் கர்த்தர்
கற்சாடி நீரை ரசமாக்கினார்
2. பன்னிரண்டு ஆண்டுகளாய் நோயுற்ற
பெண்மணிக்கு இயேசு சுகம் கொடுத்தாரு
பாடையில் வந்தவனை இயேசு
உயிரோட எழுப்பித் தந்தாரு
3. சிலுவையில் அறையுண்ட கள்வனுக்கு
சீரேசு நாதர் மீட்பளித்தாரு
நீரை தேடின சமாரியா பெண்ணுக்கு
ஜீவ தண்ணீர் கொடுத்து மீட்டாரு
No comments:
Post a Comment