55.
பல்லவி
அருணோதயம்
செபிக்கிறேன்
அருள்பரனே
கேளுமேன்
ஆவிவரம்
தாருமே - என் இயேசுவே
சரணங்கள்
1. கருணையுடன் கடந்தராவில்
காப்பாற்றினீர் தெய்வமே
கரங்கு வித்துத் தோத்தி ரிக்கிறேன் - என் இயேசுவே
சிரங்கு னிந்து
தோத்தி ரிக்கிறேன் - அருணோ
2. இந்தநாளைக் காணச்
செய்தீர் இரக்கமுள்ள தெய்வமே
இதற்கா யும்மைத் தோத்தி ரிக்கிறேன் - என் இயேசுவே
இதயத் தாலும்
தோத்தி ரிக்கிறேன் - அருணோ
3. கதிரவன்எ ழும்பிவரும் முறையின் படி என்மேலே
கர்த்த ரேநீர் பிரகா சித்திடும்
- என் இயேசுவே
நித்தம் நித்தம் பிரகா
சித்திடும் - அருணோ
4. உலோகமதில் நான்புகுந்து வேலைசெய்யப் போகிறேன்
தூத னாலே காவல் செய்யுமேன் - என் இயேசுவே
சமுகம் என்னைச் சூழச்
செய்யுமேன் - அருணோ
5. பகலில்வரும் மோச மொன்றும் தமியன்
மேல்வி ழாமலே
பாது காக்க
வேணும் தெய்வமே - என் இயேசுவே
சூது வாது போக்கும் அண்ணலே - அருணோ
6. மாமிசமும் கண்ணும்இந்த மாய்கையில்வி ழாமலே
ஆவிக் குள்அ
டங்கச் செய்யுமே - என் இயேசுவே
பாவிக் கருள் பெய்யச் செய்யுமே - அருணோ
- அருள்திரு. ச. தாவீது
No comments:
Post a Comment