அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா இராஜனுக்கே - 2
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார் - 2
ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
உமக்கே - 2
1. துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே - 2
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார் - 2 - ஆராதனை
2. வெண் மேகமே வெண் மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே - 2
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார் - 2 - ஆராதனை
- Paul Thangiah
No comments:
Post a Comment