146. இராகம்: பியாகடை ரூபகதாளம் (422)
பல்லவி
அய்யனே உன் வேதம் இன்பமே,
அனுபல்லவி
அதனை மறுத்து மீறில் அதிகம் வருகுந் துன்பமே
- அய்
சரணங்கள்
1. தேன் கூண்டொழுகு தேனில் மிக்கதே; சுத்த
தெளிந்த நறுந்தேனில் தக்கதே,-உண்ண
தித்திப் பதிகம் கொண்ட சுத்த தகைமைவிண்ட
- அய்
2. பேதையை அறிவாக்குஞ் சத்தியம்-ஆவி
பெருக உயிர்ப்பிக்கும் நித்தியம்,-நன்மை
பெருக்கங் கொண்ட நீதி, உருக்கங்கொண்ட ஜோதி
- அய்
3. பொன்னிலும் உயர்ந்த பொன்னாகுமே,-மாற்றிப்
புடமிட்ட பசும் பொன்னென்றாகுமே-நடை
புகுந்த வழிக்குத் தீபம் தகுந்த அருளி
லாபம் - அய்
4. ஆவியின் பட்டயம் ஆமே-நித்யம்
அருள் மோட்சத்தில் கொண்டு போகுமே-உந்தன்
அரிய மகிமை காட்டும் பெரிய கவலை யோட்டும்
- அய்
5. சுத்த சுத்தம் தரும் சுத்தமே;-மிக
துய்ய அறிவு தரும் வித்தமே;-இனிமை
சொல்லத் தொலைந்திடாத வல்லத் தகையதீத -
அய்
- பு.சு.யோ
No comments:
Post a Comment