அறுவடைக்களம்
நோக்கிப் புறப்பட்டோம்
அருட்பணியாளராய் செயலாற்ற
அகிலமெங்கிலும் ஆண்டவர் நாமம்
அறிவிக்க சேனையாய் எழும்பிடுவோம்
முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்
யோசுவாவின் (சேனைகள்)
தோழர்கள் நாங்களே
1. இந்த பெலன் போதுமென்ற அருள்நாதா
இதை நம்பி முன் செல்வோம் இயேசுராஜா
எழுப்புதல் அக்கினியை இறக்கிடவே
எழும்பினோம் தேவ சங்க இளைஞராய்
2. இதயத் துடிப்பு எல்லாம் நீர்தானே
இக்கால எலியாவும் நாம் தானே
இயற்கைக்கு மேற்பட்ட அற்புதங்கள்
இயேசுவின் நாமத்தில் செய்திடுவோம்
3. சாத்தானின் சாத்தானின் ததிகளை முறித்துமே
ஜனங்களை அவரண்டை சேர்ப்போமே
ஜாதிகள் தேவனை தொழுதிடவே
ஜீவ சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
No comments:
Post a Comment