அறுவடைக்காலம்
அவசரமே
அறுவடை செய்ய விரைந்திடுவீர்
விளைந்த வயல் வெளிகள்
வருந்தி அழைக்கின்றதே
1. நெருங்கி ஏவிடுதே கல்வாரி தூய அன்பே
நொறுக்கப்பட்டார், பிழியப்பட்டார்
எடுத்துரைப்பாயா தேவ அன்பை
2. காலங்களோ கடைசி நாட்களோ இல்லையே
அழிவினின்று தப்பும் வழி
அறிவிப்பார்கள் யாருமுணடோ?
3. பாதாள ஜுவாலையிலே புழுவாய் துடிக்கின்றாரே
உடன் பிறந்தோர் ஐவர் உண்டே
தடுத்திடுவார் இங்கே யாருமுண்டோ
4. மேய்ப்பனில்லா ஆடுகள் திகைத்து திரிகின்றதே
வழி சத்தியம் ஜீவனான
கிறிஸ்துவை சொல்ல யாருமுண்டோ?
- Bro. J. SAM JEBADURAI
No comments:
Post a Comment