அல்லேலூயா
அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரைத்
துதி - 2
1. நான் உயிரோடு இருக்குமட்டும்
என் தேவனைத் துதிப்பேனே - 2
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன் - 2 - அல்லேலூயா
2. நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே - 2
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான் - 2 - அல்லேலூயா
3. என் ஆத்தும தாகம் பெருக
என் கட்டுகள் அறுந்திடுமே - 2
கர்த்தரின் கரம் என்னைத் காத்திடுமே
என்றென்றும் வாழ்ந்திடுவேன் - 2 - அல்லேலூயா
4. கர்த்தர் சதா காலமும்
சீயோனில் அரசாளுவார் - 2
தலைமுறை தலைமுறையாய் அவரே
இராஜாங்கம் பண்ணிடுவார் - 2 - அல்லேலூயா
No comments:
Post a Comment