அற்புதர்
அற்புதரே என் இயேசு அற்புதரே
அவர் சொல்ல ஆகுமே அவராலே கூடுமே
அவரைப் போற்று புகழ்ந்து
பாடு
நன்றி சொல்லு நன்றாய்
பாடு
1. கானாவூர் கல்யாணத்தில்
இயேசு தண்ணீரை ரசமாக்கினார்
தவித்திடும் உன் வாழ்க்கையில்
இயேசு விடுதலை தந்திடுவார்
2. மரித்த வாலிபனை
தம் வார்த்தையின் வல்லமையால்
உயிரோடு எழுப்பினாரே
இயேசு உலகோரின் கண்கள் முன்னால்
3. பாவியாய் இருந்த என்னை
பரிசுத்தமாக்கினீரே
தோல்வியில் இருந்த என்னை
ஜெயம் பெறச் செய்தீரய்யா
No comments:
Post a Comment