விவரிக்க
இயலா நன்மை எனக்குச் செய்தீர்
விசுவாசிக்க
கிருபை எனக்கு தந்தீர்
போற்றிப் பாட வரமும் வளமாய் ஈந்தீர்
நன்றி தேவா நன்றி சொல்லுவேன்
உமக்கு நன்றி தேவா நன்றி சொல்லுவேன்
ஆராதிக்கிறேன் அகமகிழ்கிறேன்
ஆராதனை ஆராதனையே
துதி ஆராதனை என்றும் உமக்கே
1. ஜீவன் பெலனும் ரட்சிப்பு
வெளிச்சம் இயேசு
கன்மலை கோட்டை அரணான அடைக்கலம் இயேசு
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லி
என்னை போதித்து நித்தம் நடத்திடுவார்
2. திக்கற்றோரை ஆதரித்து
தாங்கி
பசியுற்றோரை
திரப்தியாக்கி நடத்தி
இதயம் நொறுங்கினோரை
குணமாக்கி
நீரே காயங்களை கட்டும் ஆண்டவர்
3. உயிரோடிருக்கும் மட்டும் உம்மை துதிப்பேன்
உள்ளளவும் கீர்த்தனமே
செய்வேன்
மகத்துவ மகிமை பிரதாபத்தை
சொல்லி
உம் வல்ல செயல்கள் நித்தம் விவரிப்பேன்
No comments:
Post a Comment