விண்ணுக்கும்
மண்ணுக்கும் சொந்தக்காரர் நீர்தானே
உம்மையன்றி
யாருமில்லையே இந்த உலகில்
1. நான் பார்க்கும் சூரியனும்
நான் பார்க்கும் சந்திரனும்
உமது கரத்தின் கிரியைகள் தானே - 2
எனக்கென்று பூமியிலே எதுவுமில்ல - (2)
சொந்தமென்று சொல்லிக் கொள்ள
உம்மையன்றி
யாருமில்லை - 2 - விண்ணுக்கும்
2. என் தாயின் கருவினிலே உருவான நாள் முதலாய்
உமது சார்பாக பூமியிலே விழுந்தேனே - 2
அன்று முதல் இன்று வரை ஆதரித்த தெய்வமல்லோ
- (2)
சொந்தமென்று
சொல்லிக் கொள்ள
உம்மையன்றி
யாருமில்லை - 2 - விண்ணுக்கும்
- Pastor Lucas Sekar
No comments:
Post a Comment