விண்ணிலும் மண்ணிலும்
உம்மையல்லாமல் ஆசைகள் இல்லைய்யா
தண்ணீரை தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே
1. உலகத் தோற்ற முன்னே
என்னை தெரிந்தீர் ஐயா
உம் அன்பு ஆச்சர்யமே உம் அன்பு அதிசயமே
உம் அன்பு உயர்ந்ததைய்யா
2. பிறந்த நாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை
கைவிடவில்லை
நீர் என்னை விட்டு விலகவில்லை
3. வாழும் காலமெல்லாம் இயேசுவே
நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
நீர் என்னை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை
- Ps. R. Reegan Gomez
No comments:
Post a Comment