95. இராகம்: பரசு. தாளம்: ஆதி.
பரிசுத்த மத்தேயுவின் திருநாள் - செப்டம்பர் 21ஆம் நாள்
“நினையேன் மனம் நினையேன்” - என்ற மெட்டு
பல்லவி
வினையேன்? பாவ
வினையேன்? - சொல்லும்
நினை வற்ற
மானிடரே
அனுபல்லவி
மனமே
தினம் கனமே வளர்
கருமங் களின் நிறைவால் - வினையேன்
சரணங்கள்
1. மத்தேயுவின் திரு நாளிது, மாறும் -
குணம் - மாறும்
பற்றே
யிவன் பேரில் பொருள், பரம-வர-மாகும்
முத்தே
மறு பேரும் லேவி, யூரும் நச ரேத்தாம்
மோன மிகு வான செல்வம், முழங்கும் இது
விளங்கும் - வினை
2. ஆயத் துறை தனிலே நின்று, அனந்தம் பொருள் சேர்த்தான்
மாயப்
பிர பஞ்ச மேன்மை, மனம்போ லிவ னடைந்தான்
நேயத் துடன் இயேசு எனைப் பின் செல் என் றிடவே
ஓயாப் பல தொல்லைகளை ஒழித்தான் மனங் களித்தான் - வினை
3. விருந், தோம்பினன் கிறிஸ்தே மிக, வியக்கப் பலர் களிக்க
மருந் தோம்பிடும் அரும் பாவிகள், ஆயக் காரரும் சுகிக்க
கரும்
பேயெனும் பரிசேயர்கள், துரும்பே
யென மதிக்க
பெரும்
போதகம் புரிய இயேசு, பெருமா னருள்
சொரிய - வினை
4. எபிரே யரின் பாடை
தனில் எழுதிச் சுவி சேடம்
எங்கும்
ஒளி வீசச் செய்த தியல்பே யிவன் போதம்
அபிரா முடை குலமேவிய,
அழகாம் எரு சலையின்
அருகும் எத்தி யோப்பா தேசம், அனைத்தும்
சாட்சி யானான் - வினை
5. எத்தி யோப்பி யாவில்
இவன் இரத்தச் சாட்சி யாக
மத்தி யான வேளைதனில்
மரித்தே இவன் சாக
சலெர்னோ வெனும் இடந் தேகமும், தானே கொண்டுபோக
ராபட் குஸ்கார்ட் ஆலயத்தில், நாட்டம்
பலர் காட்ட - வினை
- S. உவால்டர் கவிராயர்,
தென்மலை.
No comments:
Post a Comment