14 January 2026

வேத சிகாமணி லூக்கா இதோ

வேத சிகாமணி லூக்கா இதோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

97. இராகம்: ஆங்கிலம்.                                                                                                          தாளம்: ஆதி.

 

                                                பரிசுத்த லூக்காவின் திருநாள் - அக்டோபர் 18ஆம் நாள்

 

“தேவ பிதா எந்தன் மேய்ப்ப னல்லோ” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

                   வேத சிகாமணி லூக்கா இதோ

                   விளம்பும் வாக்கியம் கேட்டிடுவீர்.

 

                             அனுபல்லவி

 

                        ஆதரை யிலிது அவன் திரு நாள்

                        அன்புடன் செபம் செய்திடு வீர் - வேத

 

                             சரணங்கள்

 

1.         ஆத்தும வைத்தியன் பவுல் தோழன்

            அந்தி யோகியா செனன மென் பார்

            நேர்த்தியாய் மூன்றாம் சுவி சேடம்

            நிகழ்ந்த நடபடி எழுதினவன் - வேத

 

2.         பரிசுத்த ஆவியின் புத்தகமே

            பல அப்போஸ்தலர் ஊழியமே

            கரிசனை யோடதை எழுதி விட்டான்

            கண்டதும் கேட்டது மாம் வசனம் - வேத

 

3.         காணா திருந்தும் இயேசுவை யே

            கருத்தாய் நம்பி விசு வாசித்தான்

            மேனான் தேயோப் பிலுவுக்கு மே

            விவித நூலிரண்டும் செய்து வைத்தான் - வேத

 

4.         புறசா தியிலிவன் புண்ணிய வான்

            புகழ்ச்சி பெற்றோன் சபை தோறும்

            முரசா யிருந்த திரு வசனம்

            முழக்கிச் சித்திரம் வரைந்திடுவான் - வேத

 

5.         ஆரோக் கியந்தரும் ஔடத மாம்

            ஆத்தும சக்திக் கரு மருந்தாம்

            லூக்கா எழுதிய சுவி சேடம்

            நுட்ப முடனதைப் படித்திடுவீர் - வேத

 

6.         மக்கே தோனியோ மா அகாயா

            மல்குதல் மாத்தியாமா இற்றாலி

            ஒக்கவே பிராஞ்சு இன்ஸுவிலும்

            ஓதினான் பொயிஷியா தேசமெங்கும் - வேத

 

7.         எண்பதாம் வயதில் பிரசங்கம்

            எங்கும் செய்து வரும் போது

            வம்பர்கள் கூடிச் சிலுவை செய்ய

            வரைந்த ஒலிவ மரம் பார்த்தான் - வேத

 

8.         பாட்ரே வூரில் போதிக்க வும்

            பாதகர் கூடி ஒலிவ மரம்

            தூக்கே யென்றார் லூக்காவும்

            தொங்கி மரித்துச் சாட்சி யானார் - வேத

 

9.         அன்பன் சடலம் கான்ஸ் டாண்டின்

            நோபிள் பட்டணம் அடக்கம் செய்தார்

            பின்பும் இற்றாலி தேசம் கொண்டு

            பிரிய முடனதைப் பேணினரே - வேத

 

- S. உவால்டர் கவிராயர், தென்மலை.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...