வென்றனரே நம் இயேசுபரன்
என்றென்றும்
ஜெயித்தெழுந்தார்
ஜெயமே அடைந்துமே
இரட்சகரில்
வளருவோம்
1. சேதம் ஏதும் நெருங்கிடா
தேவ தேவன் தாங்குவார்
துன்பம் யாவும் நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும்
2. தீங்குநாளில் மறைத்துமே
சுகமாய் காத்து மூடுவார்
தகுந்த வேளை கரத்தினால்
உயர்த்தி ஜெயமே நல்குவார்
3. தேவனோடு செல்லுவேன்
மதிலை தாண்டி பாயுவேன்
உலகை ஜெயிக்கும்
தேவனால்
யாவும் ஜெயித்து செல்லுவேன்
4. நீதிமானை உயர்த்துவார்
நீதிபரனாம்
இயேசுவே
சத்துரு வீழ்ந்து அழிந்திட
தேவன் ஜெயமே தந்திடுவார்
YouTube Link
No comments:
Post a Comment