வெண்கல கதவுகள்
உடையுதே
புதிய
வாசல்கள் திறக்குதே
வெண் மேகம் புது வழி காட்டுதே
இனியதே மனம்
மகிழுதே
அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடி அகமகிழ்வோம்
1. அந்தகார பொக்கிஷங்களும்
ஒளிப்பிடத்தின்
புதையல்களும்
அன்பர் இயேசு தருகிறார்
இன்பமாக பெறுவோமே - நாம்
2. சத்துருக்குள்
முன்பாய் எனக்கு
பந்தி ஒன்றை ஆயத்தம் செய்தார்
எந்தன் பாத்திரம் நிரம்புதே
நிரம்பியே வழியுதே
- இப்போ
3. ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
அருள் மாரி பொழிந்திடுமே
நன்மை கிருபை தொடருமே
என்னை என்றும் தொடருமே - இனி
4. இருள் நீங்கி ஒளி வீசுதே
கிறிஸ்து நாமம் உயர்ந்திடுதே
தடைகள் யாவும் தகர்ந்திடும்
கிறிஸ்து இயேசு நமக்குண்டு
- ஜெய
- Bro. J. Sam Jebadurai
No comments:
Post a Comment