வேதம் அரிய வேதம்
எந்தன் தேவன் தந்தது
உன்னை மாற்றும்
புதிதாக்கும்
உயர் நோக்கம்
கொண்டது.
1. தினமும் நடக்கும் வழியை
திரு விருந்தாய் தந்திடும்
தியங்கும்
மனதை திருப்பி
துயர் பலவும் போக்கிடும்
தீமை செய்ய ஓடும் காலைத்
தடுத்து நிறுத்திடும்
தூய்மை யாக்கிடும் (2) - வேதம்
2. பரமன் இரத்தம் பாய்ந்தோடிய
கல்வாரி காட்டிடும்
பாரம் சுமந்த இயேசு
தேவன் தியாகமாய் தந்தது
பாதை தவறி ஓடும் உன்னை
பாசமாய் அழைத்திடும்
பாதை காட்டிடும் (2) - வேதம்
No comments:
Post a Comment