வானிலும்
பூவிலும் உம்மைப் போல்
வேறொரு தேவனும் இல்லையே
வாழ்விலும் தாழ்விலும் எங்களை நேசிப்போர்
உம்மைப் போல் இல்லையே
உம் மகா அன்பிற்காய்
என்ன நான் செய்வதோ
ஸ்தோத்திர பலி தந்து
உம்மையே
வாழ்த்தியே பாடுவேன்
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1. ரத்தமே சிந்தியே எங்களை
சுத்தமாய் மாற்றின தேவனே
சித்தமே
செய்ய நான் என்னையே
தத்தமாய்
படைக்கிறேன் ஏற்றிடும்
2. பாதைகள் மாறியே அலைந்த
என் வாழ்வினை மாற்றவே அழைத்தீரே
உம் உயிர்தந்து
என் ஜீவனை
நித்திய ஜீவனாய்
மாற்றினீர்
3. உன்னதம் ஏறியே
உயர்ந்தீரே
என்னையும் உம்மைப் போல் மாற்றவே
தூதர்கள் சூழவே மீண்டுமாய்
வருவீரே
என்னை நித்தியம் சேர்க்கவே
- Vincent selvakumaar
YouTube Link
No comments:
Post a Comment