மெட்டு: “ரட்சா பெருமானே பாரும்”
1. வானில் ஒளி
வீசி மின்னும்
விந்தை வெள்ளி வெள்ளியே
வான சாஸ்திரிகள் மூவர்
தேடி வந்து கண்டனர்
இயேசுபாலா இயேசு
பாலா
உந்தன் பாதம் பணிந்தோமே
2. விண்ணில் தூதர் ஒன்று கூடி
வாழ்த்தி பாடி நின்றனர்
கண்ட மேய்ப்பர் ஓடிச் சென்று
போற்றிப் பணிந்து கொண்டனர்
தேவபாலா தேவ
பாலா
தூங்குபாலா
ஆரிராரோ
3. நமக்கொரு பாலன் பிறந்தாரே
நல்ல செய்தி கூறுவோம்
நம்மை மீட்க வந்த தேவன்
என்ற செய்தி கூறுவோம்
Happy Christmas
Merry Christmas
வாழ்த்து கூறி மகிழ்வோம்.
திருமதி. ஜெபா நியூட்டன், என்.ஜி.ஓ. நியூ காலனி, பாளை.
No comments:
Post a Comment