வானமும் பூமியும் படைத்தவராம்
கடவுள்
ஒருவர் இருக்கின்றார்;
தந்தை
சுதன் தூய ஆவியுமாய்
நம்மில்
உறவுடன் வாழ்கின்றார்!
1. பரிசுத்த
ஆவியின் வல்லமையால்
திருமகன் மரியிடம் மனுவானார்;
மனிதரைப்
புனிதராய் ஆக்கிடவே
புனிதராம் கடவுள் மனிதரானார்!
2. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்,
கல்லறை
ஒன்றில் அடக்கப்பட்டார்;
மூன்றாம்
நாளில் உயிர்த்தெழுந்தார்,
மரணத்தின்
மீது வெற்றி கொண்டார்!
3. பரலோகம்
வாழும் தந்தையிடம்
அரியணை
கொண்டு இருக்கின்றார்;
உலகம்
முடியும் காலத்திலே
நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்
4. பரிசுத்த
ஆவியை நம்புகிறோம்,
பாரினில்
அவர் துணை வேண்டுகிறாம்;
பாவ மன்னிப்பில்
தூய்மை பெற்று
பரிகார
வாழ்வில் இணைந்திடுவோம்!
5. திருச்சபை
உரைப்பதை நம்புகிறோம்;
புனிதர்கள்
உறவை நம்புகிறோம்;
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை
விசுவாசப் பொருளாய் நம்புகிறோம்!
No comments:
Post a Comment