வானமும் பூமியும் மாறிடினும்
வாக்கு
மாறாத நல்ல தேவனவர்
காத்திடுவார்
தம் கிருபை ஈந்தென்றும்
கர்த்தனேசு
உந்தன் மீட்பராமே
கல்வாரி
ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலை
கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள்
நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள்
தீர்த்திட அழைக்கின்றாரே
1. கல்வாரி
மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள்
கண்டிட வந்திடாயோ
ரோகங்கள் மாற்றிடும் ஔஷதமே
தாயினும்
மேலவர் தயையிதே - கல்வாரி
2. கிருபையின்
காலம் முடித்திடுமுன்
நொறுங்குண்ட
மனதாய் வந்திடுவாய்
பூரணனே உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார்
- கல்வாரி
3. கிறிஸ்துவின்
மரணசாயலிலே
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய
அபிஷேகமும் தந்து
நீதியின்
பாதை நடத்திடுவார் - கல்வாரி
4. வருகையின்
நாள் நெருங்கிடுதே
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்த்திடுவாய்
பாரங்கள்
யாவையும் ஏற்றிடுவார் - கல்வாரி
No comments:
Post a Comment