145. இராகம்: இந்துஸ்தானி.
பல்லவி
வானாதி தாள்[1] காட்டும் - நல்ல
வாத்தி[2] சுவிசேடம்.
அனுபல்லவி
கோன் ஆதி இயேசு
கிறிஸ்து மொழிந்த தோர்
கோதில்லா[3] நீதி
நிறைந்த சுவிசேஷம். - வானாதி
சரணங்கள்
1. ஆதி ஒளி தோண, நல்ல
அறிவு மிகக் காண-சத்திய
நீதியின் வேர் ஊண,-அதை-நீணிலத்தோர் பூண
ஜாதிகளான சகல மனிதரும்
சத்ய மறை என்று
துத்யம்[4] புரியவும்
- வானாதி
2. அன்பு நிறைந்திடவும்,-கெட்ட-ஆசை
குறைந்திடவும்-மோட்ச
இன்பம் சிறந்திடவும்,-பாவ-இருள்கள் மறைந்திடவும்,
முன்பு நடந்த முரட்டாட்டத்தை
விட்டு
முற்றிலும் நற்குண
சுத்தம் பெருகவும் - வானாதி
3. கார்இருள் நீங்கிடவும்-பாவக் கயிறுபின் வாங்கிடவும்-நித்ய
பேர்ஒளி ஓங்கிடவும்-சத்ய-பிரபல்யம் நூங்கிடவும்[5]
தாரணியில் உள்ள
சர்வ மனிதரும்
சத்ய பிதா எனும்
வஸ்துவைச் சேரவும் - வானாதி
4. பாலர்கள் கூடிடவும்-நித்ய-பரகதி
தேடிடவும்-சீவ
காலங்கள் நீடிடவும்,
மோட்ச-கன முடி சூடிடவுங்
கோலம் நிறைந்த மணவாளன் இயேசுவைக்
கூடி அனுதினம் பாடித் துதிக்கவும் - வானாதி
- மரியான்
உபதேசியார், திருநெல்வேலி.
No comments:
Post a Comment