வானங்களும்
வானங்களும்
வானாதி வானங்களும்
தேவாதி தேவனே ராஜாதி ராஜனே
உம்மையே கொள்ளாதே - 2
1. உன்னதமானவர் நீரே நீரே
உண்மையுமானவர் நீரே நீரே
உண்மையிலேயே தேடுவோரை
உன்னத பலன் தந்து உயர்த்துவீரே
2. ஆவியோடு உம்மை நான் பாடுவேனே
ஆவியான அருள் மா ஜோதியே
ஆண்டிடும் என்னையும்
உம் அன்பினால்
ஆர்ப்பரிப்பேனே நான் உம் ஆவியால்
3. ஆடிப்பாடி போற்றுவேனே என் ஏசுவே
ஆயிரம் நாவு போதா
உம்மை ஏற்றவே
ஆதியிலே ஜலத்தின் மீது அசைவாடினீர்
ஆவியாக ஜனத்தின் மீது அமர்ந்திடுமே
No comments:
Post a Comment