வானங்களே
மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதி பாடு - 2
சர்வ வல்லவர் நம் ஜனத்திற்கு
ஆறுதல் தருகிறார்
சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது
இரக்கம் காட்டுகிறார் - வானங்களே
1. கைவிட்டாரே மறந்தாரே
என்று நீ சொல்வானேன் - 2
பால் குடிக்கும் பாலகனை
தாய் மறப்பாளோ? மறந்து போவாளோ?
கற்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?
இரங்காதிருப்பாளோ?
தாய் மறந்தாலும் தகப்பன் உன்னை மறக்கவே
மாட்டார்
உள்ளங்கையிலே அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார்
- வானங்களே
2. கண்களை நீ ஏறெடுத்துப் பார்
சுற்றிலும் பார் மகளே (மகனே) - 2
உன்னைப் பாழாக்கினவர்கள் புறப்பட்டுப்
போகிறார்கள்
தூரமாய்ப் போகிறார்கள்
பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது
பாடி மகிழ்கின்றது
பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே
அணிகலன் போல் நம் தேசத்தை சபை நீ அணிந்து
கொள்வாய் - வானங்களே
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment