வானம்
பூமி படைத்த இயேசுவே - உம்மை
வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்
1. வல்லவரும் நல்லவரும் நீரே - உம்மை
வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம்
2. பரிசுத்தரும் பெரியவரும் நீரே - உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்
3. உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே - உம்மை
உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
4. ஆறுதலும் தேறுதலும் நீரே - உம்மை
அன்பில் நாங்கள் ஆராதிக்கின்றோம்
5. மகிமையும் மாட்சிமையும் நீரே - உம்மை
மகிழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்
6. இனிமையும் இன்பமும் நீரே - உம்மை
என்றும் நாங்கள் ஆராதிக்கின்றோம்
7. கிருபையும் சத்தியமும் நீரே - உம்மை
கரம் உயர்த்தி ஆராதிக்கின்றோம்
8. வழியும் ஒளியும் நீரே - உம்மை
வேண்டி நாங்கள் ஆராதிக்கின்றோம்
No comments:
Post a Comment