வானம் திறந்து
வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும் - 2
தாகம் தீர்க்க வாரும் அக்கினி
ஊற்ற வாரும் - (2)
வாரும் தேவா வாரும்
1. உயிர்ப்பிக்க மாட்டீரோ
உலர்ந்த எம்மையுமே - (2)
உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே -
(2) - தாகம்
2. பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தம் ஈந்திடுமே
- (2)
உள்ளான காயங்களை உம் சமூகத்தில் நின்றிடவே
- (2) - தாகம்
3. அக்கினி அபிஷேகத்தால்
அக்கினி ஜுவாலையாக்கும் - (2)
எரிந்து ஒளி வீசிட
எண்ணெயால் அபிஷேகியும் - (2) - தாகம்
4. ஆனந்த தைலத்தினால் ஆன்மாவை மகிழ்ச்சியாக்கும்
- (2)
ஆடல் பாடலுடன் உம் நாமத்தை துதித்திடவே
- (2) - தாகம்
- சகோதரர். ஜெ. சாம் ஜெபத்துரை
No comments:
Post a Comment