20 January 2026

ஜெகநாதா குரு பரநாதா திரு-1

ஜெகநாதா குரு பரநாதா திரு-

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

88. சங்கராபரணம்                                 ஆதிதாளம்

 

                             பல்லவி

 

                   ஜகநாதா, குரு பரநாதா, திரு

                        அருள் நாதா, ஏசு பிரசாதா நாதா!

 

                             அனுபல்லவி

 

                        திகழுறுந்[1] தாதா[2], புகழுறும் பாதா,

                        தீதறும் வேத போதா!

 

                             சரணங்கள்

 

1.         முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர

            மொய்[3] கொண்டு கனியுண்ட பழியாலோ?

            நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,

            நர[4]தேவனாக வந்தாய் மொழியாலோ? - ஜக

 

2.         எளிய வேஷந் தரித்தே இங் கவதரித்தாலும்,

            இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;

            ஒளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி

            உடு[5] வழி காட்டிடப் புரிந்தாயே. - ஜக

 

3.         அருந் தவன்[6] கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,

            ஆலயத்தில் துதிக்க களித்தாயே,

            வரும் தவ மதியால் முன் மற[7] மன்னன் தேடிட, உன்

            மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே. - ஜக

 

4.         மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,

            மதுரப்பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;

            சிக்[8] கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை

            திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே. - ஜக

 

5.         இஷ்டமுடன் நேசித்தும் எமக்குப தேசித்தும்

            இணையில் பேரின்பக் கண்ணால் பார்த்தாயே;

            துஷ்டப் பேயைக் கடிந்தும் துஞ்சினர்க்[9] குயிர்தந்தும்

            துன்பப்பிணி பலவுந் தீர்த்தாயே - ஜக

 

 

- வீரமா முனிவர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] பிரகாசமுள்ள

[2] தந்தை

[3] பெருமை-பகை

[4] மானிட

[5] நட்சத்திரம்

[6] சிமியோன்

[7] கோபமுள்ள-ஏரோது

[8] அழுக்கு

[9] மரித்தோர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...