147. இராகம்: தன்யாசி. தாளம்: ஆதி.
பல்லவி
செகநாதா, குரு பரநாதா, திரு
அருள்
நாதா, இயேசு பிரசாதா நாதா!
அனுபல்லவி
திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,
தீதறும் வேத போதா! - செகநாதா,
சரணங்கள்
1. முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம்
பரிந்து,
நரதேவனாக வந்தாய் மொழியாலோ? - செகநாதா
2. எளிய
வேடந் தரித்தே இங்கவ திரித்தாலும்,
இமையோர் வந் திறைஞ்சிடத்
தெரிந்தாயே;
ஒளிசெய்யும் மணிமுடி உயர்மன்னர் தொழும்படி
உடு வழி காட்டிடப் புரிந்தாயே - செகநாதா
3. அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
ஆலயத்தில்
துதிக்க களித்தாயே,
வரும்
தவ மதியால் முன் மற மன்னன் தேடிட,
உன்
மலர்
முகங் காட்டாமல் ஒளித்தாயே -
செகநாதா
4. மக்கள்
உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
மதுரப் பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
சிக்கடர் துன்மனத்தைத் திருத்தி, அறத்தின்
வித்தைத்
திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே. - செகநாதா
5. இட்டமுடன் நேசித்தும் எமக்குபதேசித்தும்
இணையில்
பேரின்பக் கண்ணால் பார்த்தாயே;
துட்டப் பேயைக் கடிந்தும் துஞ்சினர்க் குயிர் தந்தும்
துன்பப்
பிணி பலவுந் தீர்த்தாயே. - செகநாதா
6. நிகராய் இப் பெரு நன்றி நீ இயற்றின
தன்றி
நீதிக்கும்
பலியாகப் பரிந்தாயே;
புகர்கொள் எமை நினைந்து பூங்காவில்
மிக நொந்து
பொருவில் உதிர வேர்வை சொரிந்தாயே. - செகநாதா
7. தனையர்வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
மேவி அனுபவிக்க நேர்ந்தாயே - செகநாதா
8. சயிலம் பிளந்திடவும் தபனன் வில் மங்கிடவும்
சாமி
எமைப் புரக்க மரித்தாயே;
உயிரோடு
செஞ்டர்போல் உயிர்த்துத், திருவுடல்மேல்
உற்ற
ஐந்து காயங்கள் தரித்தாயே. - செகநாதா
9. மாதவர்
எங்கும் செல்ல மறை உபதேசஞ் சொல்ல
வரங்கள்
அளவில்லாது பொழிந்தாயே;
ஓத
ஒண்ணாத துங்க உன்னதமான அங்கம்
உலகில்
அமைத்து முத்திக் கெழுந்தாயே.
- செகநாதா
10. அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,
ஆர்
உன் திறல் அறிவார், கர்த்தாவே
எமது
பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல்
உகுத்தே,
எமைப்
புரந்தாளும், மானப் பர்த்தாவே - செகநாதா
- வீரமாமுனிவர்
No comments:
Post a Comment