380.
பல்லவி
சீவனைக் கொடுப்பேன் சீவாதி பதிக்கே
சீவனைக்
கொடுப்பேன் நானே
சரணங்கள்
1. பாடும் பறவைகள் பாடாமல் போகும்
வீடு தோட்டம் காடாகும்
இந்த - சீவனைக்
2. முகத்தின் அழகும் முழுவதும் மறையும்
செகத்தின் அழகும்
அழியும் இந்த - சீவனைக்
3. நரரின் நட்பால் நட்டமே
ஏற்படும்
பரனின் நட்பால்
வரும் நன்மை இந்த - சீவனைக்
4. மரணம் வருவது மறுக்கா
நிச்சயம்
தருணங் கிடைப்பத சாத்தியம் இந்த - சீவனைக்
5. ஆடையா பரணம் அழிந்தே போகும்
கூட கோபுரம் குழி யிலாழும்
இந்த - சீவனைக்
6. இன்புறும் பாவங்கள் இங்கே யிருக்கும்
இந்தச் சடலம் மண்ணாகும் இந்த - சீவனைக்
7. அல்லேலூ யாவை அறிவிப்ப தாலே
இல்லாத இன்னல் வாராதே இந்த - சீவனைக்
No comments:
Post a Comment