ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே
இயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார்
ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே -
(2)
1. சமாரியாவின் கிணற்றினருகிலே
இயேசு கண்டார் அந்த ஸ்தீரியையே
தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் - (2)
மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்
தாகம் தீர்க்க என்ன செய்வேன்
- 2
தாகம் தீர்க்க எங்கு செல்வேன்
- ஜீவ
2. நான் கொடுக்கும் தண்ணீரல்லவோ
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
ஜீவ காலம் என்றும் நித்தியம் - (2)
நீரூற்றாய் ஊறும் என்றும்
அவனுக்குள்ளே ஊறும் என்றும்
- 2 - ஜீவ
No comments:
Post a Comment