ஜீவநதி
வருகின்றது என்னை நோக்கி
ஜீவநதி வருகின்றது
பரலோகத்தின் சிங்காசனத்தினின்று
ஜீவநதி வருகின்றது
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
1. ஜீவநதி அவரே
எந்தனுக்காய்
ஜீவனை தந்தாரே
ஜீவன் பெற்றிட ஜீவனில் வளர்ந்திட
ஆத்ம நேசர் அருள் செய்தாரே
2. ஜீவகனி மரங்களுண்டே
நதியோரம் ஜீவகனி மதுரமாமே
ஜீவ ஊற்றிலே தாகம் தீர்ந்து மகிழ்ந்திட
ஜீவ பாதை திறந்திட்டாரே
3. ஜீவ புஸ்தகமதிலே
என் பெயரையும்
கிருபையாய் எழுதினாரே
ஆணி பாய்ந்திட்ட கரங்களில் கண்ணீரை
ஆனந்தமாய் ஊற்றிடுவேனே
No comments:
Post a Comment