ஜீவநதியாய்
நீர் வாருமே
தென்றல் காற்றாய் நீர் வாருமே - 2
அக்கினி தழலே நீர் வாருமே
வெண்புறாவாய் நீர் வாருமே - 2
இன்ப நதியே தென்றல் காற்றே
அக்கினி தழலே வெண்புறாவே
- 2
1. வானத்து பனியாய் நீர் வாருமே
ஞானத்தின் பிறப்பிடமே வாருமே - 2
சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
இளைப்பாறுதல் நதியாய் நீர் வாருமே - 2
- ஜீவநதியாய்
2. ஆனந்த தைலமாய் வாருமே
ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே - 2
நெருக்கப்பட்ட என் உள்ளங்களில்
ஆறுதலாய் நீர் வாருமே - 2 - ஜீவநதியாய்
No comments:
Post a Comment