தரிசனம் கண்டிடும் கண்கள்

தரிசனம் கண்டிடும் கண்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தரிசனம் கண்டிடும் கண்கள்

            தடைகளை தகர்த்திடும் கைகள்

            எதையும் தாங்கிடும் நெஞ்சம்

            அலைந்திட சலித்திடா கால்கள்

 

                        இது ஆவியின் அபிஷேகம்

                        நமக்கு தந்திடும் அதிகாரம்

                        பின்மாரி மழையில் வாலிபர் நமக்கு

                        நன்மைகள் பொழிகின்றதே

 

1.         பூலோகமெல்லாம் தேவனைக் காணும்

            நாட்களும் வருகின்றதே

            பாறைகளும் அன்று வாய்களை திறந்து

            தேவனைத் துதித்திடுமே

            வருகையைக் காண அபிஷேகத்தாலே

            வாலிபர் நிரம்பிடுவார்

            செயல்படும் நேரம் வந்தது என்று

            போர் களம் புகுந்திடுவார்

 

2.         எலியாவின் கால அபிஷேகத்தாலே

            தேசங்கள் திகைத்திடுமே

            வானங்கள் கூட வாலிபர் ஜெபத்தால்

            பெருமழை சொரிந்திடுமே

            வாக்குத்தத்தம் செய்த அபிஷேகத்தாலே

            வாலிபர் நிரம்பிடுவார்

            கர்த்தரின் வல்லமை இதுவென காட்டி

            தேசத்தை சுதந்தரிப்பார்

 

3.         உலகத்தின் கடைசி தேசங்கள் வரைக்கும்

            சுவிசேஷம் பரவிடுமே

            தரிசனத்தாலே மனிதரை நிரப்பும்

            அபிஷேகம் பொழிந்திடுமே

            கல்லும் மண்ணும் கடவுள் அல்ல

            என்று அறிந்திடும் நாள் வருதே

            கர்த்தரே தெய்வம் என்றே

            உலகெங்கும் முழக்கங்கள் எழும்பிடுமே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு